search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள் ஊர்வலம்"

    • கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.
    • இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.

    நத்தம்:

    நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது.

    இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத், தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தர்பார் நகர், பஸ்நிலையம் வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் பூஜைகள், தீபாராதனைக்கு பின்னர் சிலைகள் அம்மன் குளத்தில் கரைக்கபட்டது. இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.

    இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் ராமையா, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தம்சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
    • சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏரியில் கரைக்க ப்பட்டது.

    இதற்காக 500க்கும் மேற்பட்ட சிறிய சிலைகள், 50க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஊர்வலத்தில் அசம்பா விதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த ஊர்வலம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    • சிலைகளுக்கு சிறப்பு பூஜை
    • ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந் தேதி இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் 686 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் வி .அன்பழகன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஆர்.சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன்கொடி அசைத்து அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எம். தீபா, பொதுச் செயலாளர் கவியரசு, அருள்மொழி,, பா.ஜ.க. நகர துணைத் தலைவர் ஆர். ரவி, வர்த்தக அணி நகர தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய சாலைகள் வீதியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் அறை மடுகு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது.

    • குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன
    • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்து சென்றனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவே ரிப்பாக்கம், நெமிலி, வாலாஜா, சோளி ங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

    இந்நிலையில், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட பொருளாளர் ரகு, ஆட்டோ சங்க துணை தலைவர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் தினகரன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், பொதுச் செயலாளர் ஜெகன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், ஆகியோர் கலந்து விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    இந்த ஊர்வலம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தொடங்கி, பஜார் வீதி வழியாக சென்று சோமநாத ஈஸ்வரர் கோயில் குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.

    • நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
    • டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.

    டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை, அணைப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார்பட்டி, தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சிறுநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, துரைச்சாமிபுரம், கோட்டை, அப்பாவு பிள்ளைபட்டி உள்ளிட்ட 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.

    நிலக்கோட்டை நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் எழுச்சி ஊர்வலம் மதுரை கோட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய பொதுச்செயலாளர் நாகராஜ் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் சிறப்புரையாற்றி பேசினார்.

    இதனைத் தொடர்ந்து ஊர்வலம் நிலக்கோட்டையில் தொடங்கி கோட்டை, துரைச்சாமிபுரம், முசுவனூத்து, பிரிவு சொக்கு பிள்ளை பட்டி, சிறு நாயக்கன்பட்டி அணைப்பட்டி வழியாக 80க்கும் விநாயகர் சிலைகள் அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

    நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் விநாயகர் சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    • பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 70 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனை அடுத்து பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வடகரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பெரியகுளம் நகர் ஒன்றியத்தின் இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் பெரியகுளத்தின் முக்கிய வீதிகளான அரண்மனை தெரு, வி.ஆர்.பி தெரு, மற்றும் தென்கரை சுதந்திர வீதி, அக்ரகாரம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்பு பெரியகுளம் பாலசுப்ரமணி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர்பாண்டியன், மாநில ஊரக வளர்ச்சிப் பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அதிமுக நகரமன்ற வழிகாட்டுதல் குழு தலைவர்சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் 4 துணைகண்காணிப்பாளர்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×